கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு முயன்றதால்.....

by Editor / 29-06-2022 07:01:39pm
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு  முயன்றதால்.....

ஈரோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்கு  முயன்றதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கரு முட்டை விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட சிறுமி கிருமிநாசினி உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கரு முட்டை விற்பனை தொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஈரோடு காவல்துறையினர் மருத்துவர்களிடம் இன்று விசாரணை நடத்தினர்.

 

Tags :

Share via