திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பி எஸ் சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி மதுரையை சேர்ந்த சோபியா வயது 19 என்பவர் சிங்களாஞ்சேரி பகுதியில் தனியாக தோழிகளுடன் வீடு எடுத்து தங்கி வருகிறார்.
இந்த நிலையில் வயிற்று வலி காரணமாக அதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரது அரை தோழிகளிடம் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags :