மாடலிங் அழகி கும்பலால் பாலியல் பலாத்காரம்-பெண் உள்ளிட்ட 4பேர் கைது

by Editor / 20-11-2022 08:21:36am
மாடலிங் அழகி கும்பலால் பாலியல் பலாத்காரம்-பெண் உள்ளிட்ட 4பேர் கைது

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கொச்சி, காக்கநாடு பகுதியில் தங்கி மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது அந்த மாடல் அழகி, உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகி, அவரது 3 ஆண் நண்பர்கள் 19 வயது பெண்ணை இரவு பார்ட்டிக்கு அழைத்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் பெண்ணின் உதவியோடு அந்த 3 இளைஞர்கள் இளம்பெண்ணை இரவு முழுவதும் தார் ஜீப் காரில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து, தோழி உட்பட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

மாடலிங் அழகி கும்பலால் பாலியல் பலாத்காரம்-பெண் உள்ளிட்ட 4பேர் கைது
 

Tags :

Share via