காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையுடன் சிறப்பாக விளையாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார் .ஜூலை இருபத்தி எட்டாம் தேதி தொடங்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். எதிர்பார்ப்புகளை மறந்துவிட்டு எவ்வித அழுத்தமும் இன்று முழு திறமையுடன் விளையாடுமாறு வீரர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த கலந்துரையாடல் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து ஹாக்கி மகளிர் அணி கோல் கீப்பர் சபிதா புனியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Tags :