வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றி கொலை

by Editor / 20-07-2022 04:08:13pm
வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் வாகனம் ஏற்றி கொலை

 ஜார்க்கண்ட்  மாநிலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் வாகனம்  ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.  ரஞ்சியின்  துப்புடா  பகுதியில் நேற்று  இரவு வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்த  உதவி ஆய்வாளர் சந்தியா  , வேன் ஒன்றை  நிறுத்த முற்பட்டபோது அவர்  மீது  வாகனத்தை  ஏற்றி  கொலை  செய்துவிட்டு  வேன் ஓட்டுநர்  தப்பியோடினார். சிசிடிவி காட்சிகள்  அடிப்படையில் ஓட்டுநரை  போலீஸார் கைது செய்தனர்.

 

Tags :

Share via