சம்பள பாக்கியை கேட்ட இளைஞரை தாக்கி, அவமானப்படுத்திய இளம்பெண்கள்

by Staff / 20-09-2022 11:06:24am
சம்பள பாக்கியை கேட்ட இளைஞரை தாக்கி, அவமானப்படுத்திய இளம்பெண்கள்

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்தவர் தினேஷ், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அந்த நிறுவனம் கடந்த சில மாதங்களாக சம்பளத்தை வழங்காமல் இருந்ததையடுத்து ராய்ப்பூர் விமான நிலையம் அருகே அமைந்துள்ள அந்த டிராவல்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்றுள்ளார். அப்போது அங்கே பணியாற்றி வந்த பெண் ஊழியர்களிடம் தனது சம்பள பாக்கியை கொடுக்குமாறு கேட்டதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததோடு இந்த இளைஞரை தகாத வார்த்தைகளில் திட்டி உள்ளனர். இதனால் அவர், அந்த ட்ராவெல்ஸின் மேனேஜர் நம்பரை கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் ஊழியர்கள் நம்பரை தரமுடியாது என்று கூறியதோடு, அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் ஆத்திரமடைந்து தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவரை அங்கிருந்த விமான நிலைய வாசலில் வைத்து பெல்ட் கொண்டு அடித்தும், அவரது சட்டையை கழற்றியும் அவரை அவமானப்படுத்தினர். சுமார் 5க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு இளைஞரை தாக்கியதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அந்த பெண் ஊழியர்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தையடுத்து தன் மீது தாக்குதல் நடத்திய பெண்கள் மற்றும் நிறுவனத்தின் மீது தினேஷ் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

 

Tags :

Share via