72 அரசு பள்ளி மாணவர்களை பிரம்பால் தாக்கிய உதவி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 72 அரசு பள்ளி மாணவர்களை பிரம்பால் தாக்கிய உதவி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்ட நிலையில் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த பதினோராம் வகுப்பு மாணவர்களை இயற்பியல் ஆசிரியர் பிரம்பால் தாக்கியதால் உடலில் காயங்கள் ஏற்பட்டன என கூறப்படும் நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதற்றம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
Tags :