அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கணித ஆசிரியர் பணி இடைநீக்கம்

by Editor / 25-07-2022 05:17:19pm
அரசு உயர்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கணித ஆசிரியர் பணி இடைநீக்கம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட கணித ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு கணித ஆசிரியர் தாமோதரன் பாலியல் தொந்தரவு தந்தக  கூரி  பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரி பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தாமோதரனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via