ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கல் தேசிய புலனாய்வு முகமை பிரிவு விசாரணை

by Editor / 27-07-2022 09:14:28am
ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கல் தேசிய புலனாய்வு முகமை பிரிவு விசாரணை

ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து 3 பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து விசாரணையை தொடங்கினர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்து 2 பேரை மட்டும் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணையை தீவிரபடுத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, 'பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் என்பவரை கடந்த 24-ந் தேதி கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் சேலத்தில் பதுங்கி இருந்த அப்துல் அலி ஜூபா என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags : National Intelligence Agency investigates terrorist hideout in Erode

Share via