அதிமுகவினர் உண்ணாவிரதம் போராட்டம்
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு,
மற்றும் தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் பொள்ளாச்சியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்சட்டபேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய மக்கள் பாதிப்படைந்துள்ளனர் குறிப்பாக பொள்ளாச்சியில் ஏற்கனவே தமிழகத்தில் எங்கும் இல்லாதவகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் வாடகை உயர்வு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர் எனவே சொத்துவரி, மின் கட்டண உயர்வை திரும்ப பெற போராட்டத்தில் ஈடுபட்டவர் வலியுறுத்தினர்
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி கந்தசாமி, பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்
Tags :