அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்கும் -தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

by Editor / 01-08-2022 09:17:20pm
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்கும் -தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

தமிழ்நாட்டில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியது. இதில் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரண்டு அணிகள் தரப்பில் யாருக்கு அழைப்புவிடுக்கப்படும் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இரண்டு தரப்பிற்கும் தேர்தல் ஆணையம் சார்பில் அழைப்புவிடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதிமுகவின் இபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெராமன் கலந்துகொண்டனர். ஓபிஎஸ் அணி சார்பில் கோவை செல்வராஜ் கலந்துகொண்டார். 

இந்நிலையில், தேர்தல் ஆணையம் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார். 

 

Tags : The Election Commission will take the final decision on AIADMK internal affairs - Chief Electoral Officer Sathyaprada Sahu

Share via