பாரி வேட்டையில் ஈடுபட்ட கிராம மக்கள் 50 பேருக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்

by Editor / 03-08-2022 01:18:18pm
பாரி வேட்டையில்  ஈடுபட்ட கிராம மக்கள் 50 பேருக்கு தலா 5000 ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழநி அருகே பாரிவேட்டை நடத்துவதற்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வேட்டை நாய்களுடன் வந்திருந்த 50 பேரை போலீசார் கைது செய்தனர். தொப்பம்பட்டி பகுதியில் பலர் வேட்டை நாய்களுடன் சுற்றி திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. . அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரித்தபோது கரூர் மாவட்டம் தோகைமலை சேர்ந்த அவர்கள் பாரிவேட்டை ஈடுபட 26 வேட்டை நாய்களுடன் வந்திருப்பது தெரியவந்தது.வன விலங்குகளை வேட்டையாடக்கூடாது என வனத்துறையினர்  5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

Tags :

Share via