தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 07-12-2022 04:05:09pm
தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள குரங்கன்தட்டு கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் சுப்புராஜ் (25). இவர் எப்போதும் தனது இடுப்பில் ஒரு கத்தி வைத்திருப்பதாராம். இதனை பார்த்த அவரது தாய் அவனை கண்டித்துள்ளார்.  தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கத்தி வைத்திருந்தேன் என்று கூறினாராம். ஆனால் அவர் தாயார் இனிமேல் கத்தி வைக்க கூடாது என்று சத்தம் போட்டதால் மனம் வேதனை அடைந்த சுப்புராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via