போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து தங்களுக்குத் தாங்களே போதை ஊசி செலுத்தி கொண்ட7 பேர் கைது

by Editor / 08-08-2022 02:58:59pm
போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து தங்களுக்குத் தாங்களே போதை ஊசி செலுத்தி கொண்ட7 பேர் கைது

 ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து ஊசியில் எடுத்து தங்களுக்கு தாங்களே உடலில் செலுத்தி  கொண்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். மலை கருப்புசாமி கோவில் பகுதியில் ஐந்து பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில் மருத்துவரின் அனுமதி சீட்டு இல்லாமல் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து கொரியர் மூலம் 100 எண்ணிக்கை கொண்ட போதை மாத்திரையை 14.000 ரூபாய் வாங்கியது தெரியவந்தது. இதேபோல் சித்தோட்டத்தில்  வீட்டில் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தில் போதை மாத்திரைகளை வாங்கி தந்த மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via