நாயை தூக்கில் ஏற்றி கொலை செய்த நபர்

by Staff / 11-09-2023 12:54:52pm
நாயை தூக்கில் ஏற்றி கொலை செய்த நபர்

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் இந்த நாய் ஒன்று படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜல்கானின் பரோலாவில் வசிக்கும் நபர் ஒருவர் தனது டிராக்டரின் இருக்கையை கிழித்ததால் தெருநாய் ஒன்றை தூக்கிலிட்டு கொடூரமாக கொன்றுள்ளார். இதனால் அந்த நாய் உயிரிழந்தது. மேலும் ஊர்மக்கள் அனைவரும் எதிர்த்த போதிலும், அவர் இரக்கமின்றி நாயை கட்டித்தூக்கி கொன்றார். அவரது இந்த செயலுக்கு சம்பவ இடத்தில் இருந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via