தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் அதிக நச்சுக் கழிவுகள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

by Editor / 10-08-2022 12:35:02pm
தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் அதிக நச்சுக் கழிவுகள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இருந்து அதிகப்படியான நச்சுக் கழிவுகள் வெளியேறுவது கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் நுழைவாயில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை இயங்கி வரும் காமாட்சி ஸ்டீல் அண்ட் பவர் என்ற தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் அதிகப்படியான நச்சு கழிவுகளால் காற்று மற்றும் நிலத்தடி நீர் மாசு அடைந்து காச நோய் புற்றுநோய் மற்றும் நுரையீரல் கோளாறு உள்ளிட்ட கொடிய வியாதிகள் பரவுவதாக குற்றம் சாட்டினார்கள்.

 

Tags :

Share via