பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவன் மீது பேருந்து மோதி பலி

by Editor / 17-08-2022 03:27:01pm
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த  மாணவன் மீது  பேருந்து மோதி பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த சிறுவன் தனியார் கல்லூரி பேருந்து மோதி உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. செம்மண் காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் பிரபாகரன் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல் பள்ளிப் பேருந்துக்கு காத்திருந்த சிறுவன் மீது நரைக்கிணறு பகுதியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து மாணவன் மீது மோதியது. குறுகிய சாலையில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க கல்லூரி பேருந்து ஓட்டுநர் இடதுபுறமாக திரும்பியதால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via