அல்பாப் நகரில் சந்தையில் ராக்கெட் வீசி தாக்குதல் 14 பேர் பலி
வடக்கு சிரியாவின் அல்பப் நகரில் உள்ள சந்தையில் ராக்கெட் வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் 11 ஆண்டுகால மோதலில் ஈடுபட்டு வடக்கில் சில பகுதிகளை கைப்பற்றிய துருக்கிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அல்பாப் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அல்பாப் நகரில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் துருக்கிக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்த முடிவு செய்திருந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :