மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் அச்சடித்த மணமக்கள்
திருவண்ணாமலை அருகே மருந்தகம் நடத்திவரும் உதவி பேராசிரியர் ஒருவர் மாத்திரை வடிவில் தனது திருமண அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கி உள்ளார். தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் எழிலரசன் அவரது பெற்றோர் நடத்தி வரும் மருந்தையும் கவனித்து வருகிறார். அவரது திருமணம் செப்டம்பர் 5ஆம் தேதி நடக்க உள்ளது. திருமணத்திற்கான அழைப்பிதழை வித்தியாசமாக கொடுக்க முடிவு செய்த மணமக்கள் மூன்று ஆண்டுகளாக சிந்தித்து வலி நிவாரணி மாதிரியான ஆசிக்லோபெனாக் என்ற மாத்திரை அட்டை வடிவில் அழைப்பிதழ் அச்சடித்து உள்ளனர்.
Tags :