போலி ஆவணங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழு பெயரில் கடன்- மேலாளர் பணிநீக்கம்(டிஸ்மிஸ் )
வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி குடியாத்த கிளையில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது .இவ்வங்கியில் ,2018-19 ஆண்டில்,மகளிர் சுய உதவி குழுவிற்கு வழங்கிய கடனில் மோசடி நடந்துள்ளதாக புகார்கள்எழுந்தன.இதனை கண்டறிய கூட்டுறவுதணிக்கை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.இதில்,மேலாளர் உமா மகேஸ்வரி 97 லட்ச ரூபாய் போலி ஆவணங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழு பெயரில் கடன் வாங்கியுள்ளது தெரிய வந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .பின்பு ஜாமீனில் வெளிவந்தார் .இந்நிலையில் ,வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் பணிநீக்க ம்(டிஸ்மிஸ் )செய்து உத்திரவிட்டார்.
Tags :