ஸ்ரீமதி மரண வழக்கு தோழிகள் ரகசிய சாட்சியம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

by Editor / 23-08-2022 09:40:59pm
ஸ்ரீமதி மரண வழக்கு தோழிகள் ரகசிய சாட்சியம்  நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இருமுறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக்குழு தாக்கல் செய்தது. இந்த சூழலில் மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் தங்கிப்படித்த அவரது 2 தோழிகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி, சுமார் 2 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர். ஜிப்மர் மருத்துவ குழுவினரின் அறிக்கை மற்றும் 2 மாணவிகளின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமையும் என்கின்றனர் காவல்துறையினர். இந்நிலையில் ஸ்ரீமதியின் பெற்றோர் ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையை கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த ஆய்வறிக்கை நாளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via