ரசிகர்கள் செல்போன்களை வாங்கி செல்பி எடுத்து கொடுத்த நடிகர் ஆர்யா

by Editor / 02-09-2022 09:09:26pm
ரசிகர்கள் செல்போன்களை வாங்கி செல்பி எடுத்து கொடுத்த நடிகர் ஆர்யா

நடிகர் ஆர்யா தனது நடிப்பில் வரும் 8ந்தேதி வெளியாகும் கேப்டன் திரைப்படத்தினை ரசிகர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்த நடிகர் ஆர்யா கேட்டுக்கொண்டார். அப்போது திரையரங்கில் இருந்த மக்கள் மற்றும் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு நடிகர் ஆர்யாவுடன் செல்பி எடுக்க முயன்றனர். இதையெடுத்து ரசிகர்கள் செல்போனை வாங்கி நடிகர் ஆர்யா செல்பி எடுத்துக்கொடுத்தார்.

திரைப்பட இயக்குநர் சக்திசௌந்தரராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படம் வரும் 8ந்தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தினை வெற்றி பெற வேண்டும், ரசிகர் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடிகர் ஆர்யா தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து கேப்டன் திரைப்படம் குறித்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சண்முகா திரையரங்கிற்கு இன்று மாலை நடிகர் ஆர்யா வருகை தந்தார். பின்னர் திரையரங்கிற்குள் சென்ற நடிகர் ஆர்யா கேப்டன் திரைப்படம் குறித்து கூறினார். தனது படத்திற்கு ரசிகர்கள் முழு ஆதரவினை தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து திரையரங்கில் இருந்தவர்கள் நடிகர் ஆர்யாவுடன் செல்பி எடுக்க முண்டியடித்துக்கொண்டு முயன்றனர். இதனை பார்த்த நடிகர் ஆர்யா, அவர்களது செல்போன்களை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார்.

 

Tags :

Share via