தன் மகளை விட நன்றாக படித்த மாணவனுக்கு விஷம் கொடுத்த மாணவியின் தாய் கைது.

by Editor / 04-09-2022 10:26:44am
தன் மகளை விட நன்றாக படித்த மாணவனுக்கு விஷம் கொடுத்த மாணவியின் தாய் கைது.

காரைக்காலில் 8ம் வகுப்பு படிக்கும் தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய் ஒருவர், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மாணவியின் தாய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். 

 

Tags :

Share via