10ம் வகுப்பு மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

by Editor / 12-09-2022 10:49:36am
10ம் வகுப்பு மாணவிக்கு காதல்  டார்ச்சர் கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

அரியலூரில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி உரிமையாளரின் உறவினரான தினேஷ் அதேப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் போனிலும் நேரிலும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் பெற்றோர்கள் மாணவியை பள்ளியில் இருந்து இடையில் நிறுத்தி விட்டனர். இருந்தபோதிலும் தினேஷ் தொடர்ந்து போனில் மாணவியை தொடர்பு கொண்டு பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர்கள் , ஆசிரியர் தினேஷ் குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் போலீசார், தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

Tags :

Share via