கமலாத்தாள் பாட்டியை கெளரவித்தார் முதலமைச்சர்

by Staff / 15-09-2022 11:12:42am
கமலாத்தாள் பாட்டியை கெளரவித்தார் முதலமைச்சர்


முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகளில் உணவு வழங்கப்படும் திட்டத்தில் ஒரு நூற்றாண்டு நிகழ்வுகளை, வரலாற்றுச் சம்பவங்களை, அரிய ஆவணங்களைத் தொகுத்து செய்தி மக்கள் தொடர்புதுறையின் தமிழரசு பதிப்பகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட " ஒரு நூற்றாண்டின் கல்வி புரட்சி" என்ற நூலை முதல்வர் வெளியிட, கோவை வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்த 1 ரூபாய் இட்லி பாட்டி என்று அழைக்கப்படும் கமலாத்தாள் பெற்றுக்கொண்டார்.

 

Tags :

Share via