தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் உயர்வைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

by Editor / 16-09-2022 07:59:48am
தமிழகம் முழுவதும்  இன்று அதிமுக சார்பில்  உயர்வைக்கண்டித்து ஆர்ப்பாட்டம்

 தமிழகத்திலுள்ள பல மாவட்டங்களில்  அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். செங்கல்பட்டில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022- வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறஉள்ளது.
 

 

Tags :

Share via