கஞ்சா விற்ற 3-சிறுவர்கள் உள்பட 7-பேர் கைது

by Staff / 21-09-2022 11:50:56am
கஞ்சா விற்ற 3-சிறுவர்கள் உள்பட 7-பேர் கைது

மதுரை: மதுரை செல்லூர் மார்க்கெட் பகுதியில் சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செல்லூர் எஸ்ஐ ஜான் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, காந்திபொட்டல் பகுதியில் சந்தேகப்படும்படி பதுங்கியிருந்த, செல்லூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (25), சஞ்சீவ்குமார் (24), கீழத்தோப்பு வேலாயுதம் (21), கொன்னவாயன் சாலையை சேரந்த 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் இவர்கள் கஞ்சா விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, இவர்களிடமிருந்து 1. 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதிச்சியம் பகுதியில் எஸ்ஐ நாகராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ஜெகஜீவன்ராம் தெரு, வைகை வடகரை, ஆர்ஆர் மண்டபம் அருகே உள்ள ஒரு டீக்கடை பகுதி உள்ளிட்ட இடங்களில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்த வெங்கடேஸ்வரன் (18) மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via