பட்டா மாறுதல் செய்வதற்கு 8000 லஞ்சம்

by Staff / 21-09-2022 05:40:18pm
பட்டா மாறுதல் செய்வதற்கு 8000 லஞ்சம்

பட்டா மாறுதல் செய்வதற்கு 8000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர்* 

திருவாரூர் மாவட்டம் பேரளம் கிராம நிர்வாக அலுவலராக தேவதாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கொல்லுமாங்குடி பகுதியைச் சேர்ந்த முகமது தஜ்மில் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக 8000 லஞ்சம் கேட்டுள்ளார். 

அதனையடுத்து முகமது தஜ்மில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கும் பொழுது லஞ்ச ஒழிப்பு காவல்துறை டிஎஸ்பி நந்தகோபால்  தலைமையில் காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via