தொண்டு நிறுவனத்தில் படித்த 3 மாணவர்கள் மாயம்

by Staff / 23-09-2022 11:38:03am
தொண்டு நிறுவனத்தில் படித்த 3 மாணவர்கள் மாயம்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள ஜி.கல்லுப்பட்டியில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக அந்தோணிபால்சாமி உள்ளார். இந்த தொண்டு நிறுவனத்தில் ஆதரவற்ற குழந்தைகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், வத்தலக்குண்டை சேர்ந்த (14), மதுரையை சேர்ந்த சபரீஸ்வரன்(14), ஆதவன் ஆகியோரும் 8 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் விடுதியில் இருந்து வெளியே சென்ற மாணவர்கள் மாயமாகினர். இதுகுறித்து சக மாணவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் அவர்களின் வீடுகளுக்கு சென்று அலுவலர்கள் விசாரித்தனர். ஆனால் அவர்கள் அங்கும் செல்லவில்லை என தெரியவந்தது.

இதனையடுத்து அந்தோணி பால்சாமி தேவதானப்பட்டி போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இதில் மாயமான ஒரு மாணவர் திருச்சியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது மீதம் 2 மாணவர்கள் எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை

 

Tags :

Share via