தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், 1 டேப் சிக்கியது

by Staff / 23-09-2022 11:35:31am
தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், 1 டேப் சிக்கியது

சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த "வாய்தா" பட நடிகை பவுலின் ஜெசிகா (29) கடந்த 2 தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நான் ஒருவரை காதலித்து வந்தேன். அந்த காதல் கைகூடவில்லை. இதனால் எனக்கு வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை" பவுலின் தீபா உருக்கமான கடிதத்தை எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது. நடிகை தீபா தற்கொலை செய்து கொண்டபோது கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐபோனை போலீசார் மீட்டனர். மொத்தமாக நடிகை பவுலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via