கஞ்சா விற்ற இருவர் கைது.
மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள சின்னசோ ரகை பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் நங்கவள்ளி காவல் உதவி ஆய்வாளர் மாதேசன் தலைமையில் அங்கு சென்ற போலீசார் சோதனை ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ரமேஷ் ( 42), ராமு (27)ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1, 000 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags :