பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்திய இந்தியா

by Staff / 26-02-2024 03:12:41pm
பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்திய இந்தியா

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஓடும் ராவி நதியின் குறுக்கே ஷாபூர் தடுப்பணை கட்டும் பணி, பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமானது. 45 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு சமீபத்தில் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டத்தை இந்தியா நிறுத்தி உள்ளது. பல ஆண்டுகளாக பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டு வந்த தடுப்பணை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. எனவே, இனி ராவி நதிநீரை இந்தியாவே முழுமையாக பயன்படுத்தும். பாகிஸ்தானுக்கான நீர் ஓட்டம் தடுக்கப்பட்டுள்ளதால், ஜம்மு காஷ்மீருக்கு கூடுதலாக 1,150 கன அடி நீர் கிடைக்கும்.

 

Tags :

Share via