உள்ளாட்சி துறை தணிக்கை குழு உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

by Editor / 01-12-2021 12:26:31pm
உள்ளாட்சி துறை தணிக்கை குழு உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 
 கடந்த 29ஆம் தேதி தணிக்கை செய்யும் பொழுது லஞ்சம் கேட்டதாக அவரிடமிருந்து 88 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நெல்லையில் லஞ்சஒழிப்புத்துறை ஆய்வாளர் ராபின் ஞானசிங் உட்பட  6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நெல்லை என்.ஜி.ஓ. காலனி உள்ள உள்ளாட்சி துறை தணிக்கை குழு உதவி இயக்குனர்  முகமது லெப்பை  வீட்டில் சோதனை. நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via