திருமணம் ஆகாததால் விரக்தியில் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா படமுடி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகன் தங்கராசு (வயது38). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தங்கராசுவின் அம்மா, அப்பா இருவரும் இறந்துவிட்டனர். அவரது தங்கை பிரியாவுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.
இந்நிலையில் தங்கராசு திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்தார். அப்போது திருமணமாகாத விரக்தியில் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கராசு மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள நாவிதன் தோட்டத்து கிணற்று பக்கம் சென்று கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 நாட்களாக அவரை காணாததால் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். அப்போது கிணற்றில் வாலிபர் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது தங்கராசு பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Tags :