ராக்கெட் ராஜாவை 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

by Editor / 07-10-2022 10:52:19pm
 ராக்கெட் ராஜாவை 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சகுளத்தைச் சேர்ந்த சாமிதுரை என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பனங்காட்டு படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா நாங்குநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது நாங்குநேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிதம்பரம் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ராக்கெட் ராஜாவை வரும் 20ம் தேதி வரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு ராக்கெட் ராஜா கொண்டு செல்லப்பட இருக்கிறார். அங்கிருந்து கோயமுத்தூர் சிறைக்கு மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது

 

Tags :

Share via