காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

by Staff / 10-10-2022 10:51:06am
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே இன்று காலை வரை துப்பாக்கிச்சண்டை நீடித்தது. இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

Tags :

Share via