வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்ததால் பரபரப்பு

by Staff / 10-10-2022 03:39:46pm
 வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்ததால் பரபரப்பு


திண்டிவனம் அருகே வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேதாச்சலம், 43; இவர் நேற்று மதியம் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது மின் கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் வீடு முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இது குறித்து தகவலறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீச்சு அடித்து தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக குளிர்சாதனப்பெட்டியில் இருந்த காஸ் வெடித்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via