ட்ரைவர் இல்லாமல் சென்ற லாரி - இருவர் பலி
குஜராத் மாநிலத்தில் சோட்டிலா பகுதியில் லாரி மோதி சாலையில் நடந்துபோன இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் லாரி தானாக ஸ்டார்ட் ஆகி முன்னோக்கி செல்ல ஆரம்பித்தது. சாலையில் ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்த இருவர் மீதி லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :