கருணை கொலை செய்யப்பட்ட 500 திமிங்கலங்கள்.

by Staff / 11-10-2022 04:02:13pm
கருணை கொலை செய்யப்பட்ட 500 திமிங்கலங்கள்.


நியூசிலாந்து நாட்டின் சாத்தம் தீவு பகுதியில் பைலட் வகையை சேர்ந்த 500 திமிங்கலங்கள் திடீரென கரையொதுங்கி உள்ளன. இதுபற்றி அரசு கூறும்போது, கடந்த வெள்ளி கிழமை 250 பைலட் திமிங்கலங்கள் சாத்தம் தீவிலும், அதற்கு 3 நாட்கள் கழித்து 240 பைலட் திமிங்கலங்கள் பிட் தீவிலும் கரையொதுங்கின என தெரிவித்து உள்ளது. இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகம் காணப்படும் என கூறப்படுகிறது. இதனால், அவற்றை காப்பாற்றுவது கடினம். மனிதர்கள் மற்றும் திமிங்கலங்கள் மீது சுறாக்கள் தாக்குதல் நடத்த கூடிய ஆபத்து உள்ளது. அதனால், உயிருடன் இருந்த திமிங்கலங்கள், பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டன. அவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசு தொழில்நுட்ப கடல்வாழ் ஆலோசகரான தவே லண்ட்குவிஸ்ட் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via