வேளாங்கண்ணி ஆலய விழாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி பலி

by Editor / 03-09-2021 03:17:15pm
வேளாங்கண்ணி ஆலய விழாவுக்கு சென்ற  கல்லூரி மாணவர்  கடலில் மூழ்கி பலி

அயனாவரத்தை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது20). இவர் தாம்பரத்தில் உள்ள கல்லூரியில் பி.காம் 3 -ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மதியம் அவர் தாய் மற்றும் குடும்பத்தினருடன் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவிற்கு சென்றார்.

பின்னர் அவர்கள் மாலை எலியட்ஸ் கடற்கரைக்கு வந்தனர். சுஷாந்த் மட்டும் கடலில் இறங்கி குளித்தார். குடும்பத்தினர் கரையோரத்தில் அமர்ந்து இருந்தனர்.

அப்போது ராட்சத அலை சுஷாந்த்தை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் அலறி துடித்து கூச்சலிட்டனர். சுஷாந்த்தை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த சாஸ்திரி நகர் போலீசார் விரைந்து சென்று மாணவர் சுஷாந்த்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே சிறிது நேரத்தில் கடற்கரையில் உள்ள போலீஸ் பூத்தின் பின்புறம் உள்ள கடற்கரையில் சுஷாந்த்தின் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீசார் மாணவர் சுஷாந்த்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via