ஏழுமலையான் உருவத்தில் மலைக்குன்று:பக்தர்கள் மாலை அணிவித்து வழிப்பாடு

by Editor / 12-10-2022 10:34:12am
ஏழுமலையான் உருவத்தில் மலைக்குன்று:பக்தர்கள் மாலை அணிவித்து வழிப்பாடு

திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் வழியில் உள்ள மலைக்குன்றில் ஏழுமலையானின் உருவம் தென்படுவதாகக்கூறி அங்கு திடீரென ஏராளமான பக்தர்கள் ஆபத்தை உணராமல் வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சிலரோ அதீத பக்தி காரணமாக சுமார் 3,000 அடி உயர மலைக்குன்றின் மேல் ஆபத்தான முறையில் கயிறு கட்டி ஏறி ஏழுமலையான் உருவம் தென்படுவதாக கூறப்படும் மலைக்குன்றிற்கு பிரமாண்ட மாலை அணிவித்து அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

 

Tags :

Share via