பாம்பன் பாலத்தில் கிரேன் விழுந்து விபத்து - 6 பேர் காயம்

by Staff / 01-02-2024 02:51:23pm
பாம்பன் பாலத்தில் கிரேன் விழுந்து விபத்து - 6 பேர் காயம்

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரயில் பாலத்தில் கிரேன் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர். புதிதாக தூக்கு பாலம் அமைக்கும் பணியின்போது கிரேன் முறிந்து விழுந்துள்ளது. கிரேன் விழுந்து படுகாயம் அடைந்த 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கிரேன் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

 

Tags :

Share via