தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவி ஷர்வானிகா சாம்பியன்

by Staff / 14-10-2022 01:13:51pm
தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவி ஷர்வானிகா சாம்பியன்

குஜராத்தில் 7 வயதுக்குட்பட்டோருக்கான ஓபன் மற்றும் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வரும் மாணவியும், தமிழ்நாடு வீராங்கனையுமான ஷர்வானிகா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதனால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

 

Tags :

Share via