தேர்தல் ஆணையரை சந்தித்து திருமாவளவன் கோரிக்கை

by Staff / 07-03-2024 04:49:32pm
தேர்தல் ஆணையரை சந்தித்து   திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை இன்று சந்தித்தார். அப்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணிய பிறகே முடிவுகளை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின்மீது நம்பகத்தன்மை இல்லாதால் யாருக்கு வாக்களித்தோம் என்று சீட்டு மூலம் தெரிவிக்கும் விவிபாட் சீட்டுகளை முழுமையாக எண்ணுவதால் ஜனநாயகமாக தேர்தல் நடப்பதை உறுதி செய்யமுடியும் என்று கூறப்படுகிறது.

 

Tags :

Share via