சிறுமியை போதைக்கு அடிமையாக்கி... பாலியல் வன்கொடுமை

by Staff / 15-10-2022 05:29:36pm
சிறுமியை போதைக்கு அடிமையாக்கி... பாலியல் வன்கொடுமை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் கடந்த ஆகஸ்டு மாதம் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டில் மீட்கப்பட்டார். அங்கு அவர் போதைக்கு அடிமையான நிலையில் மிகவும் மோசமாக காணப்பட்டார். அவரை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது உடல் நலம் தேறிவரும் சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், சிறுமியை 4 பேர் கொண்ட கும்பல், திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். பின்னர், சிறுமியை போதைக்கு அடிமையாக்கி இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதையடுத்து போலீசார் 4 பேர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via