21-ல் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
தமிழகத்தில் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கவர்னர் உரைக்குப்பின் அவை ஒத்திவைக்கப்படும்.
அதன்பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் கூடி, சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பதை முடிவு செய்வார்கள்.
இந்நிலையில், வரும் 21ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அரசின் தலைமைக் கொறடா கோவி செழியன் அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :