தீபாவளி தினத்தில் மின்சார ரயில் ஞாயிறு முறைப்படி இயக்கப்படும்

by Staff / 23-10-2022 01:56:16pm
தீபாவளி தினத்தில் மின்சார ரயில் ஞாயிறு முறைப்படி இயக்கப்படும்


தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் வாழ் மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதுவரை 9 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல சாலைகள் சென்னயில் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை தினத்தன்று சென்ட்ரல்-அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை, கடற்கரை-செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிறு முறைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

 

Tags :

Share via