மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,தாக்கியதாகவும் துணை நடிகை பரபரப்பு புகார்

by Editor / 06-07-2022 08:21:22pm
மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்,தாக்கியதாகவும் துணை நடிகை பரபரப்பு புகார்

சென்னை அடுத்த மாங்காடு அருகே கெருகம்பாக்கம் பாலகிருஷ்ணண் நகர் பகுதியை வசித்து வருபவர் பிரபல துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் . இவர் சினிமாவில் துணை நடிகையாகவும் சீரியல்களில் இவர் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். சின்னத்திரையில் நடித்து வரும் இவர் அண்ணாத்த, நட்பே துணை, எதர்க்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 

இதனிடையே 17 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு சுரேஷ்குமார் என்பவருடன் திருமணமாகி ஆனது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர் .

இந்த சம்பவம் குறித்து ரஞ்சனா கூறுகையில், "என் கணவருக்கு மனநலம் சரி இல்லை. அவரை எனக்கு திருமணம் செய்து வைத்து என்னை ஏமாற்றிவிட்டனர். என் கணவர் தற்போது, மனநல சிகிச்சை பெற்று வருகிறார். 

பல முறை என் மாமனார் நீ நடிகை தானே என கேட்டு   உடல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். இது குறித்து காவல் துறையினரிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு காரணம் என் மாமியாரின்  உறவினர் காவல்துறையில்  இருப்பது தான்.

சில தினங்களுக்கு முன்பு கூட என் மாமனார் என்னை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.நான் அவரை தடுத்ததால் பெரிய மர கட்டையை கொண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்.


இதனால் பலத்த காயம் அடைந்த நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். இது குறித்து மாங்காடு காவல் துறையினரிடம் புகார் அளித்தும் என் மாமனாரை விசாரிக்க அவர்கள் மறுக்கிறார்கள்.தலைமறைவாக இருக்கும் மாமனாரை கைது செய்து தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்  என்றார்.

 

Tags : Annatha movie actress supporting actress Ranjana Nachiar sensational complaint

Share via