3 பேர் பலி... கண் சொட்டு மருந்துகளில் கலப்படம் இல்லை
சென்னை குளோபல் ஃபார்மா ஹெல்த் கேர் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தில் இருந்த கலப்படம் காரணமாக, அதை பயன்படுத்திய அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பார்வை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால், குளோபல் ஃபார்மா ஹெல்த் கேர் நிறுவன சொட்டு மருந்துகளை நிறுத்தி வைக்குமாறு, இந்திய சுகாதாரத்துறைக்கு அமெரிக்கா வலியுறுத்தியது. இந்நிலையில், சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்துகளின் மாதிரிகளில் கலப்படம் எதுவும் இல்லை என்று தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநர் பி.வி.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Tags :