திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  சுதந்திர தின விழா 

by Editor / 15-08-2021 06:19:02pm
 திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  சுதந்திர தின விழா 

 

75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில்  சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு  மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவீன்குமார் அபினபு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும்  மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேசியக் கொடியை ஏற்றி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன் முன்னிலை வகித்து வழிநடத்தி வந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் நெல்லை மாநகர காவல் துறையில் சிறப்பான முறையில் பணிபுரிந்த 24 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.


கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் இன்றி மாநகர காவல்துறையை சேர்ந்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடாச்சலபதி யோகா பயிற்சியும் வாகன பிரிவை சேர்ந்த முதல் நிலை காவலர் 1073 மாடசாமி சிலம்பாட்டம் ஆடியும் அனைவரின் பாராட்டை  பெற்றார்கள்.
நெல்லை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் காசிபாண்டியன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் நற்சான்றிதழை பெற்றுக்கொண்டார்

 

Tags :

Share via